sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: அரசு அனுமதி

/

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: அரசு அனுமதி

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: அரசு அனுமதி

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: அரசு அனுமதி


ADDED : பிப் 15, 2024 07:01 AM

Google News

ADDED : பிப் 15, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய, தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், 50 வயதுக்கு மேல், 1.06 லட்சம் ஆசிரியர்கள்; அதற்கு கீழ், 1.17 லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், முதற்கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அவர்களையும் மூன்றாக பிரித்து, ஆண்டுக்கு 35,000 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய, ஆசிரியருக்கு 1,000 ரூபாய் வீதம் 3.56 கோடி ரூபாயை, தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்






      Dinamalar
      Follow us