sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீயணைப்பு பயிற்சி மைய வாடகைக்கு நிதி ஒதுக்கீடு

/

தீயணைப்பு பயிற்சி மைய வாடகைக்கு நிதி ஒதுக்கீடு

தீயணைப்பு பயிற்சி மைய வாடகைக்கு நிதி ஒதுக்கீடு

தீயணைப்பு பயிற்சி மைய வாடகைக்கு நிதி ஒதுக்கீடு


ADDED : மே 15, 2025 02:05 AM

Google News

ADDED : மே 15, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தீயணைப்பு துறை தற்காலிக பயிற்சி மையத்திற்கான வாடகை மற்றும் பயிற்றுநர் படிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, தீயணைப்பு துறைக்கு, 674 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன், காவல் மற்றும் சிறைத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே அடிப்படை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன.

ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏப்., 2ல், சென்னை செங்குன்றம், கரூர், மதுரை, நெல்லை, சேலம், ராணிப்பேட்டை என, ஆறு தற்காலிக மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவங்கின.

இருந்தும், இந்த பயிற்சி மையங்களுக்கான வாடகை மற்றும் பயிற்றுநர் படித்தொகைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி, ஏப்., 24ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.

அதையடுத்து, வாடகை மற்றும் பயிற்றுநர் படி என, 59.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யக்கோரி, தீயணைப்பு துறை டி.ஜி.பி.,யாக இருந்த ஆபாஷ்குமார், அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன்படி, அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருப்பதாக, தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us