sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொது சிவில் சட்டம்: நவ. 09-ல் அமல்படுத்த உத்தர்கண்ட் அரசு தீவிரம்

/

பொது சிவில் சட்டம்: நவ. 09-ல் அமல்படுத்த உத்தர்கண்ட் அரசு தீவிரம்

பொது சிவில் சட்டம்: நவ. 09-ல் அமல்படுத்த உத்தர்கண்ட் அரசு தீவிரம்

பொது சிவில் சட்டம்: நவ. 09-ல் அமல்படுத்த உத்தர்கண்ட் அரசு தீவிரம்

2


ADDED : அக் 07, 2024 09:50 PM

Google News

ADDED : அக் 07, 2024 09:50 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உத்தர்கண்ட் மாநில பா.ஜ., அரசு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திட தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்து. இதன்படி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் உத்தரகண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டியது. பிப்.,06ம் தேதி பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தமி தாக்கல் செய்தார். மசோதா நிறைவேற்றப்பட்டது. மார்ச் 13-ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் நவம்பர் 09-ம் தேதியன்று உத்தர்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த தேதியன்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மசோதா அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us