sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

/

பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

25


UPDATED : ஏப் 06, 2025 11:21 AM

ADDED : ஏப் 06, 2025 10:05 AM

Google News

UPDATED : ஏப் 06, 2025 11:21 AM ADDED : ஏப் 06, 2025 10:05 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்திய மக்கள் பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற தேர்தல் வெற்றிகளில் பிரதிபலிக்கிறது' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பா.ஜ., துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் அதே நாளில் கட்சி துவக்க விழாவை பா.ஜ., தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பா.ஜ., தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.,வின் தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த பல தசாப்தங்களாக நமது கட்சியை வலுப்படுத்த தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ந்த பாரதத்தின் கனவை நனவாக்கவும் நமது இணையற்ற உறுதிப்பாட்டை இந்த முக்கியமான நாள் மீண்டும் வலியுறுத்துகிறது.

இந்திய மக்கள் நமது கட்சியின் நல்லாட்சியைபார்க்கிறார்கள், இது கடந்த ஆண்டுகளில் நாம் பெற்ற வரலாற்று தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கிறது, அது லோக்சபா தேர்தல்கள், பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு உள்ளாட்சித் தேர்தல்கள் என எதுவாக இருந்தாலும் சரி. நமது அரசு தொடர்ந்து சமூகத்திற்கு சேவை செய்து, அனைத்து வகையான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

நமது கட்சியின் முதுகெலும்பான நமது கடின உழைப்பாளிகளான தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்கள் களத்தில் தீவிரமாகச் செயல்படுகின்றனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 24 மணி நேரமும் பணியாற்றி, ஏழைகள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் விதத்தில் நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us