sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

/

கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

கடல் நடுவில் கண்ணாடிப்பாலம்: கன்னியாகுமரிக்கு இன்னொரு சிறப்பு!

23


UPDATED : டிச 30, 2024 09:53 PM

ADDED : டிச 30, 2024 05:42 PM

Google News

UPDATED : டிச 30, 2024 09:53 PM ADDED : டிச 30, 2024 05:42 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் அமைக்கப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார்.

Image 1363066
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 25ஆண்டுகள் நிறைவு பெறுசிறது. இதன் வெள்ளி விழா ஜன.1 ம் தேதி தொடங்குகிறது.

Image 1363067
அதன் ஒரு பகுதியாக விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் அமைக்கும் பணிகள் ஓராண்டாக நடைபெற்று வந்தது. இதற்கு முன்னதாக இவ்விரு பகுதிகளுக்கும் செல்ல படகு போக்குவரத்து மட்டுமே நடைமுறையில் இருந்தது.
Image 1363068


கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று (டிச.30) கன்னியாகுமரி சென்ற முதல்வர் ஸ்டாலின் பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பாலத்தில் நடந்து சென்ற அவர், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார். இந் நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Image 1363070


முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கண்ணாடி இழை பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது காணலாம்.

Image 1363071


* 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் உருவாக்கப்பட்டு உள்ளது.

* பாலத்தின் நீளம் 77 மீட்டர், அகலம் 10 மீட்டர்.

* விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்லலாம்.

* கண்ணாடி இழை பாலம் முடிவடையும் இடத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு.

• இந்தியாவிலேயே முதல் முறையாக கடலின் நடுவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டு உள்ளது இங்கு மட்டுமே.

* பாலத்தில் நடந்து செல்லும் போது கால்களுக்கு கீழே கடல் தண்ணீர் செல்வதை நேரிடையாகவே காணலாம்.

*விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட இனி பாலத்தில் நடந்து செல்லலாம். படகு பயணம் அவசியமாகாது,






      Dinamalar
      Follow us