ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!
ADDED : மார் 31, 2025 10:04 AM

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கும், ஒரு கிராம் ரூ.8,425க்கும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 29), 22 காரட் ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 8,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 66,880 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (மார்ச் 30) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (மார்ச் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425க்கு விற்பனை ஆகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.67 ஆயிரத்தை தாண்டி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.