sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

/

அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியது: பயணிகள் அதிர்ச்சி

38


ADDED : ஏப் 21, 2025 07:12 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:12 AM

38


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சில், சக்கரம் கழன்று தேசிய நெடுஞ்சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சியில் இருந்து நேற்று மாலை, 6:00 மணியளவில், அரசு பஸ் ஒன்று, 22 பயணியருடன் கடலுார் சென்றது. டிரைவர் தனசேகரன், கண்டக்டர் குபேரசெல்வம் பணியில் இருந்தனர்.

தியாகதுருகம் அடுத்த பிரதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் முன்பக்க சக்கரம் கழன்று, தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. இதனால் பதற்றமான டிரைவர், பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார்.

அப்போது, பஸ் ஒருபுறமாக சாய்ந்து, சாலையில் தேய்த்தபடி சிறிது துாரம் ஓடி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கழன்று ஓடிய சக்கரம், 100 அடி துாரத்தில் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

அந்த நேரத்தில் சாலையில் யாரும் வராததால் பாதிப்பு இல்லை. தியாகதுருகம் போலீசார், பயணியரை பத்திரமாக மற்றொரு பஸ்சில் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us