sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு துறைத்தேர்வு பாதிப்பால் விதி தளர்வு வேண்டும்; நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம்

/

அரசு துறைத்தேர்வு பாதிப்பால் விதி தளர்வு வேண்டும்; நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம்

அரசு துறைத்தேர்வு பாதிப்பால் விதி தளர்வு வேண்டும்; நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம்

அரசு துறைத்தேர்வு பாதிப்பால் விதி தளர்வு வேண்டும்; நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம்

1


ADDED : ஏப் 17, 2025 06:10 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''அரசு துறைத் தேர்வால் நிலஅளவர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு விதித்தளர்வு செய்ய வேண்டும்'' என நிலஅளவைத்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு துறைகளில் பணியாளராக நியமனம் பெறுவோர், அப்பதவிக்கு தகுதி பெறும் வகையில் துறைத் தேர்வை எழுத வேண்டும் என்பது விதி. அரசுப் பணியாளர் தேர்வாணையமே இத்தேர்வை நடத்துகிறது.

நிலஅளவைத் துறையில் நிலஅளவர்களாக உள்ளவர்கள் நிலஅளவர் தேர்வு 1, தேர்வு 2 என இரண்டையும் 5 ஆண்டுகளில் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதோருக்கு 'மெமோ' வழங்கி, பணிநீக்கம் செய்ய முடியும். இந்தத் தேர்வு கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2021 வரை 3 முறை நடத்தப்படவில்லை.

இதனால் 2019 ல் பணியில் சேர்ந்தவருக்கு 2 ஆண்டுகள் தேர்வு எழுத வாய்ப்பின்றி போனது. இதற்கிடையே கருணை அடிப்படையில் நியமனம் பெற்றோர், புல உதவியாளராக இருந்து நிலஅளவராக பதவி உயர்வு பெற்றோருக்கு, மேற்கண்டதுறைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நெருக்கடி கொடுக்கின்றனர்.

இதனால் கருணை நியமனம் பெற்றோர் பணியை விட்டு வெளியேறும் நிலையும், நில அளவராக பதவி உயர்வு பெற்றோர் மீண்டும் புலஉதவியாளராக பதவி இறக்கம் பெறும் நிலையும் உள்ளது. எனவே இதனை சிறப்பு நிகழ்வாக கருதி அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்களில் பலரும் 55 வயதை தாண்டியவராக உள்ளனர். அரசு விதிப்படி 55 வயதைத் தாண்டியவர்கள் மேற்கண்ட துறைத் தேர்வை எழுத வேண்டியதில்லை என்ற விதி உள்ளது. எனவே அவர்களுக்கு விதித்தளர்வு அளித்து ஒரு பதவி உயர்வு வழங்கலாம்.

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: புல உதவியாளர்கள் மேற்கண்ட துறைத் தேர்வை எழுதத் தேவையில்லை என்று 2 முறை விலக்கு பெற்றோம். புலஉதவியாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். மீதியுள்ளோர் 55 வயதை தாண்டியவர்கள், மாற்றுத் திறனாளிகள். இவர்கள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது சிரமம். நில அளவராக பதவி உயர்வு பெற்றும் பாதிக்கப்பட்டுள்ள புல உதவியாளர்களுக்கு விதித்தளர்வு செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us