sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

/

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

27


ADDED : நவ 30, 2024 01:11 PM

Google News

ADDED : நவ 30, 2024 01:11 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை எழிலகத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ளது. சென்னையில் 4 செ.மீ. தான் மழை பெய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.






      Dinamalar
      Follow us