sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஞ்சுவிரட்டுக்கு நிபந்தனைகள் அரசு பதில் அளிக்க உத்தரவு

/

மஞ்சுவிரட்டுக்கு நிபந்தனைகள் அரசு பதில் அளிக்க உத்தரவு

மஞ்சுவிரட்டுக்கு நிபந்தனைகள் அரசு பதில் அளிக்க உத்தரவு

மஞ்சுவிரட்டுக்கு நிபந்தனைகள் அரசு பதில் அளிக்க உத்தரவு


ADDED : ஜன 22, 2025 05:52 AM

Google News

ADDED : ஜன 22, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மஞ்சுவிரட்டுக்குரிய நிபந்தனைகளை நீக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டுவை சேர்ந்த முருகானந்தம் தாக்கல் செய்த பொதுநல மனு: ஜல்லிக்கட்டு வேறு, மஞ்சுவிரட்டு வேறு. மஞ்சுவிரட்டில் காளைகள் நான்குபுறமும் ஓடும். காளைகள், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அதற்கு ஜல்லிக்கட்டிற்குரிய வாடிவாசல் அமைத்து விதிமுறைகளை திணித்து, பரிசுகள் வழங்குமாறு அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்.

தடுப்புகள் அமைக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் அணிவதற்கு பனியன்கள் வழங்க வேண்டும். நுாறடிக்குள் காளைகளை அடக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கின்றனர். இதனால் மஞ்சுவிரட்டு நடத்த அதிக பணம் செலவாகிறது. அப்போட்டி நடத்துவது குறைந்து வருகிறது. மஞ்சுவிரட்டிற்குரிய நிபந்தனைகளை நீக்கி பழைய பாரம்பரிய முறைப்படி நடத்த அனுமதிக்க வலியுறுத்தி தமிழக கால்நடைத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு கால்நடைத்துறை செயலர், சிவகங்கை கலெக்டர் 8 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us