ADDED : மார் 14, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக கவர்னர் ரவி, 3 நாள் பயணமாக டில்லி கிளம்பி சென்றார். வரும் 16ம் தேதி, அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்
முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ., பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை, தமிழக அரசு திரும்ப பெற்றது. அவர் அமைச்சராக பதவியேற்பு செய்து வைக்கும்படி, கவர்னருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த சூழலில், கவர்னர் ரவி, 3 நாள் பயணமாக டில்லி கிளம்பி சென்றார். பொன்முடி பதவி பிரமாண விவகாரம் தொடர்பாக, மூத்த வக்கீல்களிடம் ஆலோசனை நடத்த அவர் சென்றிருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன

