sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

/

கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

15


ADDED : ஆக 15, 2024 05:34 PM

Google News

ADDED : ஆக 15, 2024 05:34 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கவர்னர் ரவி அழைப்பின்பேரில் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று மாலையில் கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,15) தேநீர் விருந்து அளித்தார். இதற்காக, திமுக, அதிமுக, பா.ஜ., தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. ஆனால், திமுக கட்சி சார்பில் புறக்கணித்தாலும், அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

அண்ணாமலையுடன் பேச்சு

விருந்தில் பங்கேற்க வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களுக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு எழுந்து சென்று அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் தனியாக பேசினார். அரசியலில் எதிரெதிராக இருக்கும் இரு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us