sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

/

கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து: தமிழக அரசு புறக்கணிப்பு

67


ADDED : ஜன 25, 2025 03:22 PM

Google News

ADDED : ஜன 25, 2025 03:22 PM

67


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து நடப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதனை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளன.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் நடக்கும் இந்த விருந்தை புறக்கணிக்க போவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து செயல்படுவதால், இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவித்துள்ளது. தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகிஉள்ளது.






      Dinamalar
      Follow us