sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

/

வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

4


ADDED : ஆக 20, 2024 11:04 AM

Google News

ADDED : ஆக 20, 2024 11:04 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில் லேசான சரிவை சந்தித்துள்ளது.

நிலத்தடி நீர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் எப்படி இருக்கிறது என்பதை நீர் வளத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். துறை கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ஜூன் மாதத்தை காட்டிலும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது; 16 மாவட்டங்களில் சரிந்துள்ளது.

அதிகரிப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 0.79 மீட்டர், நாமக்கல்லில் 0.69 மீட்டர், திருவள்ளூரில் 0.61 மீட்டர் அதிகரித்துள்ளது.

தர்மபுரி, கடலுார், தஞ்சாவூர், நாகை, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிந்துள்ளது.

வருண பகவான்

அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 0.71 மீட்டர், துாத்துக்குடி, பெரம்பலுார், தர்மபுரி மாவட்டங்களில் தலா 0.50 மீட்டரும், நீர் மட்டம் சரிந்துள்ளது. தமிழகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொழியும்.

இம்மாதத்திலும் துவக்கம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது; வரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. 'வருண பகவான் மனது வைத்தால் தான் நீர் வளம் குறையாமல் காக்க முடியும்' என்கின்றனர், விவசாயிகள்.






      Dinamalar
      Follow us