ADDED : ஜன 30, 2024 10:19 PM
சென்னை:தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 6,244 பதவிகளுக்கு, 'குரூப் - 4' தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 4 போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் மாதம் தேர்வு நடக்க உள்ளது.
ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. பிப்ரவரி வரை விண்ணப்பிக்கலாம். இரண்டு வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்.
தமிழ் தகுதித்தாள், 150 மதிப்பெண்களுக்கு, 100 கேள்விகள் இடம் பெறும். பொது பாடங்களில், 75 கேள்விகள் மற்றும் அறிவுத்திறன் சோதனை கேள்விகள், 25 என, 100 கேள்விகளுக்கு, 150 மதிப்பெண் வழங்கப்படும்.
மொத்தம், 200 கேள்விகளுக்கு, 300 மதிப்பெண் வழங்கப்படும். குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்கள், தேர்ச்சி பட்டியலில் இடம் பெறுவர். கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.