sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குரூப் - 4' மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்

/

'குரூப் - 4' மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்

'குரூப் - 4' மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்

'குரூப் - 4' மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்


ADDED : ஜூலை 17, 2025 02:51 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், சமீபத்தில் நடந்த 'குரூப் - 4' தேர்வில், தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள், பாடத் திட்டத்திற்கு அப்பால், மிக கடினமாக இருந்துள்ளன. தமிழ் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட, தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம் பெற்றன. அதேநேரம், ஆங்கில பகுதி வினாக்கள் எளிதாக இருந்தன.

இதுதான், தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? தமிழ் வழியில் படித்தவர்களை போட்டியில் இருந்து வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகி உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தேர்வர்களின் எதிர்காலத்தோடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், தொடர்ந்து விளையாடுவது கண்டனத்திற்குரியது. தேர்வர்களின் நலன் கருதி, குரூப் - 4 மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us