sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குரூப் - 4 காலியிடத்தை 15,000 ஆக உயர்த்தணும்'

/

'குரூப் - 4 காலியிடத்தை 15,000 ஆக உயர்த்தணும்'

'குரூப் - 4 காலியிடத்தை 15,000 ஆக உயர்த்தணும்'

'குரூப் - 4 காலியிடத்தை 15,000 ஆக உயர்த்தணும்'


ADDED : அக் 14, 2024 09:22 AM

Google News

ADDED : அக் 14, 2024 09:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் --- 4ன் கீழ் வரும் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை, 15,000 வரை அதிகரிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:


தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக மூன்று ஆண்டுகளில் 34,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக, இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் குரூப் - 4 போட்டி தேர்வை எழுதிய இளைஞர்கள், முடிவிற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் நலன் மற்றும் லட்சக்கணக்கில் காலி பணியிடங்கள் உள்ளதையும் கருதி, குரூப் - 4ன் கீழ் வரும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை, 15,000 வரை அதிகரிக்க, முதல்வர் நடவடிக்கை எடுத்து அரசு துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us