ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி!: முதல்வர் ஸ்டாலின் புகார்
ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி!: முதல்வர் ஸ்டாலின் புகார்
ADDED : ஏப் 15, 2024 01:43 PM

சென்னை: ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வழிப்பறி
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி., வரி அல்ல… வழிப்பறி. தன் பிணத்தின் மீது தான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும் என்று முதல்வராக இருந்த போது எதிர்த்த மோடி, பிரதமரானதும், ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம் என்று ஒரே நாடு ஒரே வரி கொண்டு வந்தார்.
ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. அடுத்து என்ன செல்பி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.,வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு, 50 சதவீத அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.
இண்டியா கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்
33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவீத நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவீத பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இண்டியா கூட்டணிக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

