ADDED : பிப் 04, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வராக இருந்தபோது துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக கூறிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தற்போது சட்டம்- - ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார்.
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு என்றைக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும், பழனிசாமியால் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது.
கூவத்துாரில் உருவான 'பழனிசாமி அ.தி.மு,க.,' வரும் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். அ.தி.மு.க.,வை, பா.ஜ.,வின் கிளைக் கழகமாக ஆக்கிவிட்டனர். 2024ல் தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பழனிசாமி, பின் ஏன் அங்கு போய் சேர்ந்தார் என இன்று வரை சொல்லவில்லை.
- மனோஜ் பாண்டியன்
முன்னாள் எம்.எல்.ஏ., - தி.மு.க.,

