sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

/

அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

1


ADDED : மார் 21, 2026 07:40 PM

Google News

1

ADDED : மார் 21, 2026 07:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தல், தொகுதி பங்கீடு என அரசியல் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக எகிறி வரும் சூழலில் தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, மாம்பழத்துறை, அணைகெடங்கு பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்தது.

இந்த சூழலில், மன்னார் வளைகுடா முதல், வடக்கு உள் கர்நாடகா வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 23, 24ம் தேதிகளில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்.

வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us