sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'

/

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: 14 மாவட்டங்களுக்கு மே 1ல் 'ஆரஞ்ச் அலெர்ட்'

1


ADDED : ஏப் 29, 2024 06:19 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 06:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இன்று(ஏப்.,29) முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 மாவட்டங்களுக்கு வரும் 1ம் தேதி வெப்ப அலைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுதும் கடும் வெயில் வாட்டுவதுடன், வெப்ப அலையும் தாக்குவதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெயில் உக்கிரமாக உள்ளதால், பகலில் வீட்டை விட்டு, தேவையின்றி வெளியே வர வேண்டாம் என, பொதுமக்களை அரசும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் இன்று முதல், 1ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வடக்கு உள்மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பான அளவை விட 5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 43 டிகிரி செல்ஷியஸ், அதாவது 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை நிலவலாம்.

காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கூடுதலாக உஷ்ணம் உணரப்படும். கடலோரப் பகுதிகளில் காற்றில் 80 சதவீதம் அளவுக்கும், கடலோரம் அல்லாத உள்மாவட்ட பகுதிகளில், 50 சதவீதம் அளவுக்கும் ஈரப்பதம் இருக்கும்.

இன்றும், நாளையும் தமிழக வடக்கு உள்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும். வரும் 1ம் தேதி, வடக்கு உள்மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும். 14 மாவட்டங்களுக்கு, வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலெர்ட்டும் விடப்பட்டுள்ளது.

லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு, 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, உஷ்ணம் அதிகமாக உணரப்பட்டு, அசவுகரியமான சூழல் ஏற்படுகிறது. எனவே, வெப்ப அலை வீசும் இடங்களில், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள் போன்றோர், சாலைகளில் சுற்ற வேண்டாம் என, கலெக்டர் அலுவலகங்கள் வழியே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 இடங்களில் தகிப்பு

நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, ஈரோட்டில் 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.பாளையங்கோட்டை, தஞ்சாவூர் 38; மீனம்பாக்கம், கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி 39; மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, சேலம் 40; தர்மபுரி, திருப்பத்துார், திருத்தணி, வேலுார் 41 டிகிரி செல்ஷியஸ் என, 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டியது.
கொடைக்கானல் 22; ஊட்டி, குன்னுார் 27; வால்பாறை 30; காரைக்கால் 35; சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், நாகை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி 36; கன்னியாகுமரி 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.








      Dinamalar
      Follow us