தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: கலெக்டர்

3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: கலெக்டர்

3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்கவும்: கலெக்டர்


ADDED : மே 17, 2024 12:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 12:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: வரும் 18, 19, 20 தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், அந்த 3 நாட்களில் நீலகிரிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் வரும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது: வானிலை மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்து உள்ளதால், 3 நாட்கள் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும். இதனை மீறி வருபவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us