இன்று 19, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; வார்னிங் கொடுத்தது வானிலை மையம்
இன்று 19, நாளை 7 மாவட்டங்களில் கனமழை; வார்னிங் கொடுத்தது வானிலை மையம்
ADDED : நவ 14, 2024 01:43 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,14) 19 மாவட்டங்களிலும், நாளை (நவ.,15) 7 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் தமிழகம், அரபிக் கடல் பகுதிகளில் காற்றத்தழுத்த தாழ்வு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவ.,15)
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நவ.,20ம் தேதி வரை கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.