sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4 மாவட்டங்களில் இன்று கனமழை

/

4 மாவட்டங்களில் இன்று கனமழை

4 மாவட்டங்களில் இன்று கனமழை

4 மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : நவ 12, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரை யிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில், 3; சென்னை மாவட்டம் மதுரவாயல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில், தலா, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், வரும், 17ம் தேதி வரை லேசான அல்லது மிதமான மழை தொடரலாம்.

திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us