sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

/

ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

ஜன., 13, 14, 15 ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; தென் மாவட்டங்களில் பொங்கலன்று மழை எச்சரிக்கை!

3


ADDED : ஜன 11, 2025 02:04 PM

Google News

ADDED : ஜன 11, 2025 02:04 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (ஜன.,11) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (ஜன.,11) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.,12) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜன.,13ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. பொங்கல் அன்று ஜனவரி 14ம் தேதி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us