sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

/

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: நெல்லைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

1


ADDED : ஜன 19, 2025 01:21 PM

Google News

ADDED : ஜன 19, 2025 01:21 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம் கிளாம்பாக்கம், தாம்பரம், கிண்டி, அடையாறு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.

இந்நிலையில், மழை குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 23ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜன.,20ம் தேதி காலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் ஜன.,24,25ல் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us