தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?
UPDATED : மே 25, 2025 12:20 PM
ADDED : மே 25, 2025 11:30 AM

சென்னை: ''தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 215 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (மே 25) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:
அவலாஞ்சி- 215
சின்னக்கல்லார் - 137
சின்கோனா - 95
எமரால்டு - 94
பந்தலுார் - 93
வென்ட்வொர்த் 90
தேவாலா - 87
அப்பர் பவானி 74
சிறுவாணி அடிவாரம் 73
சோலையாறு 73
கூடலுார் பஜார்- 71
அப்பர் கூடலுார் - 69
கீழ் கோத்தகிரி 65
சேர்முள்ளி - 61
பார்வுட் - 59
வுட் பிரையார் - 59
வால்பாறை - 51
மேடவாக்கம் - 48.3
மடிப்பாக்கம் - 48.3
மாக்கினாம்பட்டி- 42.4
ஆற்றில் வெள்ளம்!
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து வரும் நொய்யல் வெள்ளம்.