sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

/

சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னையில் விடிய விடிய கொட்டியது கன மழை: மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு

8


UPDATED : ஆக 23, 2025 11:37 AM

ADDED : ஆக 23, 2025 07:52 AM

Google News

8

UPDATED : ஆக 23, 2025 11:37 AM ADDED : ஆக 23, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டியது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார்.

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தை வெளி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், செனாய் நகர், அமைந்தகரை, முகப்பேர், பல்லாவரம், சென்னை விமான நிலையம், பம்பல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு (மில்லி மீட்டரில்)

சோழிங்கநல்லுார் 170.5

பாரிஸ் 169.5

மடிப்பாக்கம் 149.1

கொரட்டூர் 143.4

ஆற்காடு 140.6

நெற்குன்றம் 139.2

திருத்தணி 131

சோழவரம் 131

நாராயணபுரம் 125.4

திருவள்ளூர் 113

அம்பத்துார் 112.8

வளசரவாக்கம் 112.2

ஒக்கியம்துரைப்பாக்கம் 108.9

செம்பரம்பாக்கம் 105

பள்ளிக்கரணை 104.7

பூண்டி 104

காவேரிப்பாக்கம் 102.2

மேடவாக்கம் 102

கலவை 98.4

அயப்பாக்கம் 97.2

கனமழை எச்சரிக்கை


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடமேற்கு வங்கக் கடலில், ஒடிஷா - மேற்கு வங்க கரைக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் உருவாகக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் லேசான மழை உருவாக வாய்ப்புள்ளது; வரும், 28 வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு அலட்சியம்

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி இன்று காலை 4.50 மணி அளவில் உயிர் இழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள்.
வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு. கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக தெரிவிக்கின்றனர். அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்.
கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை. சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



ரூ.20 லட்சம் நிதியுதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த துாய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு, மின்சார வாரியம் சார்பில், ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us