sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

/

சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை

1


UPDATED : ஏப் 16, 2025 01:16 PM

ADDED : ஏப் 16, 2025 11:39 AM

Google News

UPDATED : ஏப் 16, 2025 01:16 PM ADDED : ஏப் 16, 2025 11:39 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மேடவாக்கத்தில் காலை 11 முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்தில் 127 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.



சென்னையில் அம்பத்தூர், பாடி, மதுரவாயல், போரூர், வானகரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. புறநகரில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சென்னை மேடவாக்கத்தில் காலை 11 முதல் 12 மணி வரை ஒரு மணி நேரத்தில் 127 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேடவாக்கம்- 127

வளசரவாக்கம்- 75

நெற்குன்றம்- 72

சாலிகிராம்- 72

அண்ணாமலைபுரம்- 73

பாரிமுனை- 70

விமான சேவை பாதிப்பு

சென்னையில் பெய்த திடீர் கனமழை மற்றும் மோசமான வானிலையால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருவுக்கு திரும்பியது. மேலும் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.



3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us