sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

/

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

போராட்டங்களுக்கு அனுமதி கோரும் அவகாசத்தை நீட்டிக்க சட்டத்திருத்தம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

2


ADDED : ஜன 31, 2025 01:01 PM

Google News

ADDED : ஜன 31, 2025 01:01 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்தாண்டு நவம்பர், 7ல், சென்னை மன்றோ சிலையில் இருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்த அனுமதி கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் விண்ணப்பம் அளித்த நிலையில், குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதியில்லை என்பதால், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில், வழித்தடத்தை மாற்றிக் கொள்ளும்படி, போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி, நவம்பர், 7ல் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நேரடியாக சென்று, கவர்னரை சந்தித்து மனு அளிப்பது என அறிவித்த நிலையில், முந்தைய நாளான நவ., 6ல் பேரணிக்கு அனுமதி மறுத்து, போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போலீசாரின் செயலால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்கு வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், விண்ணப்பித்த 48 மணிநேரத்தில் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதன்மூலம், கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us