sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் உரிமம் சஸ்பெண்ட் : ஐகோர்ட் உத்தரவு

/

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் உரிமம் சஸ்பெண்ட் : ஐகோர்ட் உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் உரிமம் சஸ்பெண்ட் : ஐகோர்ட் உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் உரிமம் சஸ்பெண்ட் : ஐகோர்ட் உத்தரவு

15


ADDED : பிப் 23, 2024 03:50 PM

Google News

ADDED : பிப் 23, 2024 03:50 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அடிக்கடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், ‛‛ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். பஸ் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள்,‛‛ அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை. தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us