sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

/

தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

தமிழக கல்லுாரிகளில் அதிக கட்டணம்; எம்.பி.பி.எஸ்., சேர மறுத்த 1,143 பேர்

13


ADDED : அக் 18, 2024 05:14 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:14 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : மாநில ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மற்ற மாநிலங்களில் சேர்ந்ததால், 1143 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 13.5 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய், மாநில அரசு கட்டணமாக நிர்ணயித்துள்ளது; ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 19 லட்சம் ரூபாய்; அரசு ஒதுக்கீட்டுக்கு 11 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இதனால், சுயநிதி கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இடங்கள் பெற்ற பின், தமிழக கல்லுாரிகளை கைவிடுகின்றனர்.

அதேபோல், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலையில் இடம் பெற்று சென்றுள்ளனர்.

அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 59 எம்.பி.பி.எஸ்., - 62 பி.டி.எஸ்., மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 503 எம்.பி.பி.எஸ்., - 519 பி.டி.எஸ்., என, மொத்தம் 1143 இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக இயக்குனர் சங்குமணி கூறுகையில், ''அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றதால், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றவர்கள், அதை வேண்டாம் என்று திரும்ப ஒப்படைத்து உள்ளனர். இந்த இடங்கள், அடுத்தகட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us