sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க': ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

/

'புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க': ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

'புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க': ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

'புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்க': ஸ்டாலினை தொடர்ந்து மம்தாவும் கடிதம்

12


ADDED : ஜூன் 21, 2024 01:30 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:30 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1ம் தேதி அமலாகிறது. 'இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' எனவும், 'இந்த சட்டங்களில் பிழைகள் இருப்பதாகவும்' குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 18ல் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், '146 எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம். எனவே இந்த மூன்று சட்டங்களையும் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us