சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
UPDATED : டிச 02, 2025 09:36 PM
ADDED : டிச 02, 2025 07:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூரில் நாளை(டிச.,03) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

