sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

/

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

3


UPDATED : டிச 02, 2024 11:13 AM

ADDED : டிச 02, 2024 08:56 AM

Google News

UPDATED : டிச 02, 2024 11:13 AM ADDED : டிச 02, 2024 08:56 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ துாரம் சுற்றளவு கொண்டது. இந்த மலையை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக, 5,000க்கும் மேற்பட்ட அடுக்குமாடி, குடிசை, ஓடு கூரையால் ஆன வீடுகள் கட்டப்பட்டு, 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்நிலையில், பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின் மீது மண் சரிந்து காணப்பட்டது.

குடிசை வீட்டில் வசித்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் நிலச்சரிவில் சிக்கியதாகவும் தகவல் பரவியது.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். இருட்டாக இருந்ததால், மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை. தற்போது, மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியை சுற்றியுள்ளவர்களை மீட்டு, தனியார் பள்ளியில் முகாம் அமைத்து, 15க்கும் மேற்பட்டோரை தங்க வைத்துள்ளனர்.

இ.பி.எஸ்., வலியுறுத்தல்

சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை தீபமலை அடிவாரத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிலச்சரிவால், மண்குவியல் மூடியதில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

நிலச்சரிவு ஏற்பட்டு 18 மணி நேரம் ஆகியும் மண்ணில் புதையுண்டவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் விரைந்து செயல்பட்டு இப்பேரிடரில் சிக்கித்தவிப்போரை உயிருடன் மீட்க விரைவாக செயல்பட வேண்டும். நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பூரண நலத்துடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us