ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்
ஆதரவளித்த ஸ்டாலினுக்கு ஆப்படிப்பது எப்படி? திருமாவளவனை நெளிய வைத்த கமல் பிரசாரம்
UPDATED : ஏப் 04, 2024 07:08 AM
ADDED : ஏப் 04, 2024 07:00 AM

தமிழகம் முழுதும் தி.மு.க., கூட்டணிக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் கமல். தி.மு.க., கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார் நடிகர் கமல். அப்போது அவர் பேசிய பேச்சு, அருகில் இருந்த திருமாவளவனை நெளிய வைத்து உள்ளது.
சிதம்பரத்தில் கமல் பேசியதாவது: எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத் தான். தேசத்துக்குப்பாதுகாப்பின்மை என்று வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தமுறை இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால் ஜனநாயகமே இருக்காது என அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் என்பதால் கவலைப்படுகிறார்கள். நாங்கள் வீரர்கள் என்பதால் களம் கண்டே ஆக வேண்டும். இந்தமுறை நான் தியாகம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அது தியாகம் அல்ல, வியூகம்.

