இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்
இந்த வாரம் எப்படி இருக்கும்?: 12 ராசிகளுக்கான வார பலன்
UPDATED : பிப் 09, 2024 08:03 AM
ADDED : பிப் 09, 2024 07:53 AM

சென்னை: வெள்ளி முதல் வியாழன் வரை (9.2.2024 முதல் 15.2.2024 வரை) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்:
கேது, சுக்கிரன், சூரியன், புதன், சனி நன்மைகளை வழங்குவர். சூரிய பகவானை வழிபட அல்லல் விலகும்.
அசுவினி: உங்கள் நட்சத்திரநாதன் கேதுவின் சஞ்சார நிலையால் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு வெற்றியாகும். வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். முயற்சி பலிக்கும். லாபம் அதிகரிக்கும்.
பரணி: புதன் வரை நட்சத்திர நாதன் சுக்கிரன் அருளால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். செயல்களில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: உங்கள் நட்சத்திரநாதன் சூரியனால் இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தை விரிவு செய்வீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு குறையும்.
ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் முதல் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் விருத்தியாகும். புதிய முயற்சி முன்னேற்றம் தரும். செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். அரசு விவகாரங்களில் உண்டான தடை அகலும். தடைபட்ட பணி நடந்தேறும்.
ரோகிணி: சந்திர பகவானின் சஞ்சார நிலைகளால் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த பிரச்னை விலகும். அடுத்தவரிடம் இருந்து எதிர்பார்ப்பு குறையும். வருமானம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: லாப ராகுவால் உங்கள் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி அகலும். அந்நியரால் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.
மிதுனம்:
சனி, குரு நன்மைகளை வழங்குவர். நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.
மிருகசீரிடம் 3, 4: லாப குருவால் வியாபாரம், தொழில் விருத்தியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வரவேண்டிய பணம் வசூலாகும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். போட்டியாளர் விலகிச் செல்வர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெள்ளி அன்று விழிப்புணர்வு அவசியம்.
திருவாதிரை: பாக்கிய சனியும் லாப குருவும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். முயற்சிக்கேற்ப லாபம் உண்டாகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். வெள்ளி, சனிக்கிழமைகளில் எச்சரிக்கை அவசியம்.
புனர்பூசம் 1,2,3: தொழில் ஸ்தான ராகுவால் வெளிநாட்டு தொடர்பு ஆதாயமாகும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை அமையும். அந்நியர்கள் வழியே ஆதாயம் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர். சனிக்கிழமை சில சங்கடம் தோன்றி மறையும்.
கடகம்:
கேது, புதன் நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: மூன்றாமிட கேதுவால் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி விலகும். வியாபாரத்தை விரிவு செய்வீர். தொழிலில் இருந்த தடை நீங்கும். நிதி நிலை உயரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். ஞாயிற்றுக்கிழமை பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூசம்: உங்கள் நட்சத்திரநாதன் எட்டாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். இயந்திரத் தொழிலில் நெருக்கடி உண்டாகும். உங்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் முயற்சி பலிக்கும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வழக்கில் சாதக நிலை உண்டாகும். ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
ஆயில்யம்: மூன்றாமிட கேது உங்கள் செயல்களை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். சந்திரனின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அஷ்டம சனிக்காலம் என்பதால் உடல்நிலையில் சில சங்கடம் தோன்றும். திங்கள் செவ்வாயில் செயல்களில் கவனம் தேவை.
சிம்மம்:

மகம்: குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை உணர்வீர்கள். அவருடைய பார்வைகளால் சங்கடம் இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். செவ்வாய் புதனில் புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.
பூரம்: ஆறாமிட செவ்வாயால் திறமை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் லாபம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். புதன் வியாழனில் செயல்களில் சில சங்கடம் தோன்றும்.
உத்திரம் 1: பாக்கிய குரு, ஆறாமிட செவ்வாயால் உங்கள் விருப்பம் நிறைவேறும். திங்கள் வரை சூரியனும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். செயல்களில் லாபம் ஏற்படும். வியாழன் அன்று விழிப்புணர்வு அவசியம்.
கன்னி:
சுக்கிரன், சனி, சூரியன் நன்மை வழங்குவர். பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: கடந்த வார சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் முதல் சூரியனும் சாதகமாக சஞ்சரிப்பதால் செயல் லாபமாகும். வியாழன் அன்று உங்கள் செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.
அஸ்தம்: ஆறாம் அதிபதி சனிபகவான் ஆட்சிபலம் பெற்றிருப்பதால் துணிச்சலுடன் செயல்படுவீர். நினைத்ததை சாதித்துக் கொள்வீர். ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.
சித்திரை 1,2: வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆறாமிட சனியால் முயற்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்போரின் செல்வாக்கு உயரும். செவ்வாய் முதல் சூரியனும் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.
துலாம்:
ராகு, குரு நன்மையை வழங்குவர். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சித்திரை 3,4: சப்தம குருவால் செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
சுவாதி: ஆறாமிட ராகுவால் அசாத்திய துணிச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச்செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பண வரவில் இருந்த தடை விலகும், முயற்சி லாபமாகும். சாதுரியமாக செயல்பட்டு நன்மை அடைவீர். ஏழாமிட குருவால் வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
விசாகம் 1,2,3: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். பனிரெண்டாமிட கேதுவால் செலவு உண்டாகும். ஒரு சிலர் புதிய இடம் அல்லது வீடு வாங்குவீர். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி உற்சாகத்தை தரும்.
விருச்சிகம்:
சுக்கிரன், செவ்வாய், சூரியன், கேது நன்மையை வழங்குவர். சனீஸ்வர வழிபாடு சங்கடம் போக்கும்.
விசாகம் 4: உங்கள் ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். அரசு வழி செயல் ஆதாயமாகும். நினைத்தவற்றை சாதித்து முடிப்பீர். வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
அனுஷம்: திங்கள் வரை சூரியன் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சியில் பலிதமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ராசிநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் நன்மை தருவார். தெய்வ பலம் அதிகரிக்கும்.
கேட்டை: லாபஸ்தான கேது, மூன்றாமிட செவ்வாயால் விருப்பம் நிறைவேறும். சங்கடம் விலகும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். முயற்சிகளில் ஆதாய நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.
தனுசு:
சுக்கிரன், சனி, சூரியன், குரு நன்மைகளை வழங்குவர். நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மூலம்: குரு பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் உண்டாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளுக்கு பதவி, பொறுப்பு தேடி வரும்.
பூராடம்: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர். செவ்வாய் முதல் சூரியனும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் ஈடுபடும் செயல் முழுமை அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திராடம் 1: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் செல்வாக்கை உயர்த்துவார். சங்கடம் குறையும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசு வழி முயற்சி லாபமாகும்.
மகரம்:
ராகு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். அனுமனை வழிபட அல்லல் தீரும்.
உத்திராடம் 2,3,4: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழில் குறித்த சிந்தனை அதிகரிக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் பண வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.
திருவோணம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். பண சங்கடங்களில் இருந்து விடுபடுவீர். தொழிலில் உண்டான தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவானால் ஒரு சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு தோன்றும்.
அவிட்டம் 1,2: செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி பலிக்கும். செயல்களில் பட படப்பு, மனக்குழப்பம் உண்டாகும் என்பதால் பொறுமையும் மவுனமும் இன்று அவசியம்.
கும்பம்:
சுக்கிரன் நன்மைகளை வழங்குவார். குலதெய்வ வழிபாடு சங்கடங்களை போக்கும்.
அவிட்டம் 3,4: பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் தேவை. அடுத்தவர்களை நம்பி மேற்கொள்ளும் செயல்களில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். அரசு வழி முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.
சதயம்: சங்கடம் விலகும். தன ஸ்தான ராகு வரவை அதிகரிப்பார். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர். இடம் வாங்குவீர்கள். செயல்களில் லாபம் உண்டாகும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். நிதானம் அவசியம்.
பூரட்டாதி 1,2,3: குரு பகவானின் பார்வைகளால் சங்கடம் விலகும். போட்டியாளர்களை சமாளித்து வெற்றி அடைவீர். வருமானம் அதிகரிக்கும். பெரியோரின் துணையால் உங்கள் செயல் வெற்றியாகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். திட்டமிட்டு செயல்படுவதில் லாபம் தோன்றும்.
மீனம்:
குரு, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். குரு பகவானை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரிப்பதுடன் அவருடை பார்வை உங்கள் முயற்சிகளை லாபமாக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். அலுவலக பணியாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரட்டாதி: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் செலவு அதிகரிக்கும். நெருக்கடி குறையும். எண்ணம் நிறைவேறும். புதிய சொத்து சேரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
ரேவதி: லாப சூரியனால் திங்கள் வரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். அரசு வழி செயல் நன்மை அளிக்கும். வாரம் முழுவதும் செவ்வாய் பகவானால் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனஸ்தான குருவால் பொருளாதார நிலை உயரும்.

