sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

/

மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

மீண்டும் மீண்டும் சொல்றேன்... நான் ஒரு கிறிஸ்தவன்; துணை முதல்வர் உதயநிதி

228


ADDED : டிச 18, 2024 10:08 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:08 PM

228


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'நான் ஒரு கிறிஸ்தவன் என்று மீண்டும் மீண்டும் சொல்வதில் பெருமையடைகிறேன்' என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கோவையில் எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது: ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விழா என்றால், அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கிறிஸ்துமஸ் வந்தால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களுக்கு தெரியும், நான் படிச்சது டான் பாஸ்கோ பள்ளியில், மேல்படிப்பு படிச்சது லயோலா கல்லூரியில். சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 'நானும் ஒரு கிறிஸ்டியன் தான்' என்று பெருமையாக சொன்னேன். உடனே பல சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல்.

இன்னைக்கு மீண்டும் உங்க முன்னாடி சொல்றேன், நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். 'நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன், முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்துனு நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். எல்லா மதங்களின் அடிப்படையே அன்பு தான். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன, எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us