மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!
மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!
UPDATED : அக் 09, 2024 01:58 PM
ADDED : அக் 09, 2024 01:50 PM

சென்னை: 'என்னை இழிவுப்படுத்துபவர்களை பார்த்து பரிதாபம் வருகிறது' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தனது படத்தை, ஒரு சிலர் காலால் மிதிக்கும் வீடியோவை, உதயநிதி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். கருணாநிதி மீது ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

