sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெறி வரணும்; உன் மூஞ்ச பாத்தா வர மாதிரி தெரியலையே; மேடையிலேயே தொண்டரை கலாய்த்த அன்புமணி

/

வெறி வரணும்; உன் மூஞ்ச பாத்தா வர மாதிரி தெரியலையே; மேடையிலேயே தொண்டரை கலாய்த்த அன்புமணி

வெறி வரணும்; உன் மூஞ்ச பாத்தா வர மாதிரி தெரியலையே; மேடையிலேயே தொண்டரை கலாய்த்த அன்புமணி

வெறி வரணும்; உன் மூஞ்ச பாத்தா வர மாதிரி தெரியலையே; மேடையிலேயே தொண்டரை கலாய்த்த அன்புமணி

14


UPDATED : ஜன 28, 2025 04:55 PM

ADDED : ஜன 28, 2025 04:52 PM

Google News

UPDATED : ஜன 28, 2025 04:55 PM ADDED : ஜன 28, 2025 04:52 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் நடந்த பா.ம.க கட்சி கூட்டத்தில், 'வெறி வரணும்..உன் மூஞ்ச பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே' என கட்சி தொண்டரை அன்புமணி கடிந்து கொண்டார்.

சேலத்தில் நடந்த பா.ம.க., கட்சி கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன் வட தமிழகம் எப்படி இருந்தது என்று எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தினமும் பிரச்னை, கலவரம் நடந்து கொண்டே இருக்கும். ராமதாஸ் ஒருவரால் வட தமிழகத்தில் 30 ஆண்டு காலமாக அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நக்சலைட் இல்லாமல் போனதற்கு காரணம் ராமதாஸ்.இதே மாவட்டத்தில் தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம்.

அப்படி என்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா? நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால் அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை. தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பா.ம.க.,வுக்கு அதிக எம்.எல்.ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம் மாவட்டம்.

எவ்வளவோ செய்திகள் இருக்கிறது இதை நீங்கள் மக்களிடம் சொல்லலாம்.என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற.. உன்னையும் தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு.. 52 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கிய தொகுதி அது. எல்லாத்திற்கும் தான் சொல்கிறேன். இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. 10 மாதத்தில் களத்தில் இறங்குங்கள். அந்த வெறி வரவேண்டும். கோபம் வரவேண்டும். பல்லை கடித்துக் கொண்டு இறங்குங்கள். வருமா, என்ன உன் மூஞ்ச பாத்தா எனக்கு வெறி வர மாதிரி தெரியலயே, இறங்குங்க, போங்க ரெண்டுல ஒன்னு பாத்துக்கிடலாம். என்ன ராமகிருஷ்ணா கோபம் வந்திருச்சா? இவ்வாறு அன்புமணி பேசினார்.






      Dinamalar
      Follow us