sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

/

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்: சீமான் அதிரடி

36


UPDATED : அக் 19, 2024 10:22 PM

ADDED : அக் 19, 2024 10:18 PM

Google News

UPDATED : அக் 19, 2024 10:22 PM ADDED : அக் 19, 2024 10:18 PM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:''நான் ஆட்சிக்கு வந்தால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலையே தூக்குவேன்,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு வருகிறதா? தமிழ்த்தாய் வாழ்த்தில் இரு வார்த்தைகளை தூக்கியதற்கு இவ்வளவு கொந்தளிக்கிறீர்கள். ஆனால் அந்த பாடலில் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யார்?. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள்.

திராவிடம் என்ற வார்த்தை எதை குறிக்கிறது. திடீரென்று இவ்வளவு கோபப்படுகிறீர்களே? திராவிடம் என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை தருவார்கள்? 3 தலைமுறையாக தமிழ் எழுத படிக்க முடியாத தலைமுறையை உருவாக்கியதை தவிர, தெருவிற்கு இரண்டு மதுபானக் கடைகளை திறந்ததை தவிர திராவிடர்களின் சாதனையை சொல்ல முடியுமா? அனைத்து உரிமைகளையும் பறி கொடுத்துவிட்டு மாநில உரிமைகளை பற்றிபேசுகிறார்கள்.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கின்றனர்.சென்னையில் மழை நீரை வடிக்க முடியவில்லை. மக்கள் கொந்தளிக்கின்றனர். இதை திசைதிருப்ப திராவிடம் பிரச்னையை கிளப்புகின்றனர்.

ஹிந்தியை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் திணித்தது திராவிட ஆட்சி. முதலில் ஹிந்தியை திணித்தார்கள். பிறகு ஹிந்திக்காரர்களை திணித்தார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் எந்த உடன்பாடும் இல்லை. திராவிடம் என்ற சொல் தமிழ் கிடையாது. மாடல் என்ற சொல்லும் தமிழ் கிடையாது. பிறகு திராவிட மாடலில் எப்படி தமிழ் வாழும். திராவிடம் என்ற சொல்லே சமஸ்கிருதம்.

இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us