sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

/

கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா: கள் குடித்துவிட்டு சீமான் கேள்வி

36


UPDATED : ஜன 21, 2025 04:37 PM

ADDED : ஜன 21, 2025 02:26 PM

Google News

UPDATED : ஜன 21, 2025 04:37 PM ADDED : ஜன 21, 2025 02:26 PM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் கள் விடுதலை மாநாட்டில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அவர் கள் குடித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு ஏன் தடை? கள்ளுக்கடைக்கு அனுமதி அளித்தால், டாஸ்மாக் கடையில் வியாபாரம் குறைந்துவிடுமோ? உயிரை குடிக்கும் விஷக்கடைகளை திறக்கும் அரசு, கள்ளுக்கடைகளை திறக்க ஏன் மறுக்கிறது?

தேசிய பானமான கள்ளுக்கு, தமிழகத்தை தவிர இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அனுமதி இருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைவதை ஆய்வு செய்யாத அரசு டாஸ்மாக் விற்பனை குறைவதை ஆய்வு செய்கிறது. கள் மது என்றால் டாஸ்மாக் கடைகளில் அரசு விற்பது தீர்த்தமா?அருகிலிருக்கும் எல்லா மாநிலங்களிலும் கள் அனுமதி உண்டு, தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் மற்ற மாநில முதல்வர்களுக்கு சாராய ஆலை இல்லை இங்கு இவர்களுக்கு சாராய ஆலை இருக்கிறது.

இந்தியாவில் ஆளும் எந்த மாநில முதல்வருக்கு சாராய ஆலை இருக்கிறதா? தமிழகத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக இந்த அரசு டாஸ்மாக்கில் மட்டும் பாஸ்மார்க் வாங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்பனை செய்கிறார்கள்.

சட்டசபையில் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடுகிறோம் என அமைச்சர் பேசுகிறார். இந்த பொங்கலுக்கு 2 நாட்களில் ரூ.725 கோடிக்கு குடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஏதற்கு இலவசம்? கள் இறக்குவது வேளாண்மை சார்ந்த தொழில். இவ்வாறு சீமான் பேசினார்.






      Dinamalar
      Follow us