sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனுமதியின்றி ‛சிவராத்திரி....' பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

/

அனுமதியின்றி ‛சிவராத்திரி....' பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

அனுமதியின்றி ‛சிவராத்திரி....' பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

அனுமதியின்றி ‛சிவராத்திரி....' பாடல் : வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா

11


UPDATED : ஜூலை 11, 2025 01:08 PM

ADDED : ஜூலை 11, 2025 12:09 PM

Google News

11

UPDATED : ஜூலை 11, 2025 01:08 PM ADDED : ஜூலை 11, 2025 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி...' பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது வரும் புதிய படங்களின் பாடல்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ... பழைய படங்களின் பாடல்களை பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக இந்த போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளும், வழக்கு பாய்வதும் தொடர்கிறது.

‛அனுமதியின்றி எனது பாடல்கள் பயன்படுத்துதாக' சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற ‛கண்மணி அன்போடு காதலன்...' பாடல், அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற ‛ஒத்த ரூபா தாரேன்...' பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்டஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

Image 1441867

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், இன்று(ஜூலை 11) ரிலீஸாகி உள்ளது.

இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்' படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us