sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்

/

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்

 கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம்


ADDED : ஜன 06, 2026 05:35 AM

Google News

ADDED : ஜன 06, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், சின்ன சேலம் அருகே மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2024 ஜுன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பின், மாவட்டம் முழுதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், கள்ளக் குறிச்சி, சேலம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை தலைதுாக்கின. அதை உறுதிப் படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அருகே வெள்ளிரிக்காடு என்ற கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்ற ராமன் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 10 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 'இவருக்கு கள்ளச்சாராயம் எப்படி கிடைத்தது; எந்த இடத்தில் காய்ச்சப்பட்டது என்பது குறித்து, விரிவான விசாரணை நடக்கிறது' என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us