sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலோர பகுதிகளில் கூடுதல் ரோந்து

/

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலோர பகுதிகளில் கூடுதல் ரோந்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலோர பகுதிகளில் கூடுதல் ரோந்து

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலோர பகுதிகளில் கூடுதல் ரோந்து


ADDED : ஆக 09, 2011 02:28 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : தமிழகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், சிறிதுகாலம் கடத்தல் மற்றும் ஊடுருவல் முற்றிலும் குறைந்திருந்தது. சில மாதங்களாக கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. சுதந்திரதின விழா கொண்டாட உள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி வேறு ஏதாவது ஒரு பகுதியில் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில தினத்திற்கு முன் ராமேஸ்வரம் வந்த இலங்கையர் ஒருவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். இலங்கையில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இலங்கையர் கூறியது முற்றிலும் தவறானது என தெரியவந்தது. இதுபோல் அகதிகள் போர்வையில் யாரும் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரமாக கண்காணித்தும், கடல் மார்க்கமாக வருவோர் குறித்து இலங்கையிலும் விசாரித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us