உள்ளடக்கத்திற்கு செல்ல
இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு
இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு
ADDED : செப் 04, 2026 03:05 AM
அ நிறம் | அளவு
சென்னை: இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்.
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லுாரி, தேசிய பாதுகாப்பு கல்லுாரி ஆகியவற்றில், பயிற்சிகளை முடித்துள்ளார். மேலும், கான்பூர் ஐ.ஐ.டி-.,யில், கணினி அறிவியலில், தொழில்நுட்ப முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய ராணுவ தென்பகுதி தலைவர் என்ற முறையில், லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இப்பகுதியில் செயல்பாட்டு, தளவாட, நிர்வாக மற்றும் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த பொறுப்புகளை மேற்பார்வையிடுவார்.
