sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் புயல், கனமழையால் இண்டிகோ விமானங்கள் ரத்து

/

சென்னையில் புயல், கனமழையால் இண்டிகோ விமானங்கள் ரத்து

சென்னையில் புயல், கனமழையால் இண்டிகோ விமானங்கள் ரத்து

சென்னையில் புயல், கனமழையால் இண்டிகோ விமானங்கள் ரத்து

1


ADDED : நவ 30, 2024 10:41 AM

Google News

ADDED : நவ 30, 2024 10:41 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் புயல், கனமழையால், விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.



பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் வந்த ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து இன்று எந்த விமானங்கள் இயக்கப்படாது என இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். பலத்த காற்றுடன் கூடிய கனமழை என மோசமான வானிலை நிலவுவதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் காணப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us