ADDED : செப் 11, 2011 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பரமக்குடி கலவரத்தில் காயமடைந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனையிலும், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் மதுரை பிரித்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஆயுதப்படை போலீசார் முனியசாமி, பழனிவேல் ஜெகன், செல்வின் செல்வகுமார், திருநெல்வேலி எஸ்.எஸ்.ஐ., மணியன், பூமிநாதன், பரமக்குடி மகளிர் போலீஸ் டெய்சி நிர்மலா, தங்கமணி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.