sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

/

தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

தேர்தல் நெருங்குவதால் நழுவும் ஐ.பி.எஸ்.,கள்

8


ADDED : டிச 20, 2025 03:47 AM

Google News

8

ADDED : டிச 20, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், 'அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள்' என்ற குற்றச்சாட்டில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளுக்கு மாறும் முயற்சியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல, அவர் களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்படும்.

பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 40 பேரின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியில் உள்ள, போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., மற்றும் டி.ஐ.ஜி.,க்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் தங்கள் மீது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படாமல் இருக்க, சிறப்பு பிரிவுகளில் தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் போது, அரசியல் கட்சிகளின் சார்பு அதிகாரிகள் என்ற முத்திரை குத்தப்படும்.

ஆளும் கட்சிக்கு தேவையான உதவிகளை செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் சிக்க நேரிடும். அதனால், தேர்தல் கமிஷனின் நெருங்கிய கண்காணிப்பிற்கும், நடவடிக்கைக்கும் ஆளாகி, பணி பதிவேட்டிலும் கரும்புள்ளி வைக்கப் படும்.

இதையெல்லாம் தவிர்க்கவே, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி., - லஞ்ச ஒழிப்பு துறை, பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, தலைமையிடத்து டி.ஜி.பி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு மாற்றம் கேட்டு, பொறுப்பு டி.ஜி.பி., அபய்குமார் சிங்கிடமும், அரசிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us