sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

/

கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறுகிறதா பவானி: குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

5


ADDED : ஜூன் 30, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:56 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.

இந்த நீரை ஆதாரமாக கொண்டு, மேட்டுப்பாளையம் முதல் பவானி கூடுதுறை வரை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 16 கூட்டு குடிநீர் திட்டங்கள், 46 தனி குடிநீர் திட்டங்கள் வாயிலாக தினசரி 30 கோடி லிட்டர் நீர், பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த நீரை ஆதாரமாக கொண்டே காளிங்கராயன் அணை, கொடிவேரி அணை மற்றும் கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட 3 லட்சம் ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் ஜீவநதியாக விளங்கும் பவானி ஆற்றுநீர் மாசடைந்து, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது என்றபுகார் எழுந்துள்ளது.

கொடிவேரி அணை - பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி நகராட்சிகள், 12 பேரூராட்சி மற்றும் 44 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகர, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக பவானி ஆற்றில் கலக்கிறது.

ஆறு. பாசன கால்வாய் கரையோரங்களில் குப்பை உள்ளிட்ட திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், நன்னீர் வழிந்தோடி வரும் இந்த ஜீவநதி, கழிவுகளை சுமக்கும் ஆறாக மாறி வருகிறது.

உள்ளாட்சி நிர்வாகங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, வெளியேற்ற வேண்டும்.

தொழிற்சாலைகள், உற்பத்தி கூடங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, நீர்நிலை, ஆறுகள் மற்றும் வாய்க்காலில் கலக்க விடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்துசெய்யவும் சட்டத்தில் அனுமதியுண்டு.

இதுபோன்ற சட்ட விதிகளை புறந்தள்ளி, பவானி ஆற்றில் தொடர்ந்து திட, திரவ கழிவுகள் கொட்டப்படுகின்றன; களைச்செடிகள் மற்றும் ஆகாயத்தாமரை பல இடங்களில் படர்ந்துள்ளன.

மாநில அரசு, உரிய கவனம் செலுத்தி பவானி நீர் மாசுபடுவதை தவிர்க்க, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாக விளங்கி, இன்று பாழ்பட்டு கிடக்கும் நொய்யல் நதி போன்று, பவானி ஆற்றின் நிலையும் மாறும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us